Arts & Culture Foundation
- Event 1
- Event 2
- Event 3
மாவீரன் பூலித்தேவன்
மலேசியாவில் தமிழ் கலை கலாச்சார பாரம்பரியங்களை தொ டர்ந்து பாதுகாத்து வளர்க்கும் நோக்கத்தில் டான் ஸ்ரீ கே. ஆர் சோமா கலை கலாச்சார அறவா ரியம் கடந்த *பத்தாண்டுகளாக பீஷ்மர் , ராஜேந்திர சோழன், சாணக்கிய சபதம், மதுரை பாண்டியன், பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாடக ங்களையும் , கண்ணகி, வள்ளித்திருமணம், சிவத் தாண்டவம், தில்லான மோகனாம்பாள் மற்றும் நாட்டியாமிர்தம் போன்ற இசை நாட்டிய நாடகங் களையும் அரங்கேற்றி யுள்ளது. அந்த வரிசையில், கடந்த 2022-ஆம் ஆண்டு டான் ஸ்ரீ கே.ஆர் சோமா கலை கலாச் சார அறவாரிய ஆதரவில் கிள்ளான் தமிழர் கலை மன்றத்தின் தயாரிப்பில் " மாவீரன் பூலித்தேவன் " வரலாற்று மேடை நாடகம் 25/06/2022 - 26/06/22 ஆகிய இரு தினங்கள் இரவு 7.30 மணிக்கு மலாயாப் பல்கலைக்கழக எக்ஸ்பெரிமெண்டல் அரங்கத்தில் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து 10/12/2022 மலாக்கா மாநில கலை கலாச்சாரத் துறை அரங்கத்தில் இரவு மணி 7.31 அளவில் நடைபெற்றது. இந்நாடகத்தைக் காண ஏராளமான உள்நாட்டு கலைஞர்களும், கலா ரசிகர்களும் கலை ஆர்வலர்களும் மற்றும் பொது மக்களும் திரளாக வருகை அளித்தனர். மறக்கப்பட்ட கலைகளாக கருதப்படும் இந்த மேடை நாடகங்களை மீட்டெடுத்து மீண்டும் மக்களிடை யே குறிப்பாக இளந்தலை முறையினர் நமது வரலாற்று விழுமியங் களையும் தொன்மங்களின் வேர்களையும் அறிந்து கொ ள்ளவும் வாய்ப்பாக அமை யும் என்பதில் சந்தேகமில்லை.
- All
- Gallery Item

